business

img

‘செபி’ விதிமுறை மீறல்... சர்வதேச  நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்....

மும்பை:
செபி விதிமுறைகளுக்கு எதிராக, 6 நிதித் திட்டங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

பங்குச் சந்தையில் பரஸ்பர நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தும் சர்வதேச நிறுவனமான பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம், 2020 ஆம் ஆண்டு 6 நிதித் திட்டங்களி லிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இது செபி விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி ரூ.5 கோடிஅபராதம் விதிக்கப்பட்டுள் ளது.  இந்த 6 திட்டங்கள் மூலம் முதலீட்டு நிர்வாகம் மற்றும் ஆலோசனைக் கட்டணமாக திரட்டிய ரூ.512 கோடியை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது.புதிய பரஸ்பர நிதித் திட்டங்கள் எதையும் 2 ஆண்டுகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது என்றும் பங்குச் சந்தை பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) தடை விதித்துள்ளது.செபி-யின் இந்த உத்தரவு பல சிறு முதலீட்டாளர் களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும் என்று பங்கு பரிவர்த்தனை ஆலோசனை நிறுவனமான ஃபையர்ஸ் தலைவர் கோபால் காவலி ரெட்டி தெரிவித்துள்ளார்.

;